காவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..!
பொங்கலை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் காவல் துறையினரின் தடையையும் மீறி சேவல் சண்டை ஜோராக நடைபெற்றது.
Web Desk | January 15, 2021, 9:01 PM IST
1/ 4
ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த தடை அமலில் உள்ளது. ஆனால் ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களான கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சேவல் சண்டை சம்பிரதாய விளையாட்டாகவே உள்ளது.
2/ 4
எனவே ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி, பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டைகள் ஜோராக நடைபெறுவது வழக்கமாகவே உள்ளது.
3/ 4
சேவலுக்கு காலில் கத்திகளை கட்டியும், லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பந்தயமாக வைத்தும் பொங்கல் சமயத்தில் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். சேவல் சண்டை நடத்த சட்டப்படி தடை அமலில் உள்ளது.
4/ 4
ஆனால் மக்கள் பிரதிநிதிகள் சேவல் சண்டை நடத்தும் நபர்களுக்கு அளிக்கும் ஆதரவு காரணமாக அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே பிரம்மாண்டமான அளவில் பந்தல் போட்டு, விரிவான விளம்பரம் செய்து சேவல் சண்டை நடத்தப்படுகிறது.