பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்குச் செல்லும் ராஜ்நாத்சிங், இந்திய - பாகிஸ்தான் மற்றும் இந்திய - சீன எல்லைப்பகுதிகளை பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நேற்று நான்காவது முறையாக நடைபெற்ற ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை பதினான்கு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற நிலையில் இன்று பாதுகாப்பு அமைச்சரின் பயணம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.