ஆலோசனையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா தரப்பில் எடுக்கப்படும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றியும், இந்திய-சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும் ராஜ்நாத் சிங் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, எல்லை மோதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இந்திய வீரர்கள் உடனான மோதலில் சீன ராணுவ கமாண்டிங் அதிகாரி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், உயிரிழப்பு தொடர்பாக சீனா இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.