கடந்த 2 மாதங்களில் இணையவழி தாக்குதல்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் இதற்கு சீனா காரணம் இல்லை என்றும் பிரதமர் அலுவலகத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து, சீனாவின் 59 செல்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, சீனா, இந்தியா மீது சைபர் தாக்குதலை தொடங்கியிருப்பதாக தகவல் பரவியது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி குல்சான் ராய், சைபர் குற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், சீனப் பொருட்களை குறைத்துக் கொள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் திட்டமிட்டிருப்பதாக கூறிய அவர், நமது சுயசார்பு கொள்கை இறக்குமதியை பெருமளவு குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.