உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் செயல் - 59 செயலிகள் மீதான தடைக்கு சீனா கண்டனம்

இந்தியா - சீனா

டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்தது உலக வர்த்தக நிறுவன விதிகளை மீறிய நடவடிக்கை என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்தியாவின் நடவடிக்கை ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாகவும், இதனை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீனா கூறியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கை வெளிப்படைத் தன்மைக்கு எதிரானதாகவும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் செயல் என்றும் சீனா விமர்சித்துள்ளது.

    மேலும் படிக்க...

    விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சோதனை

    ஏற்கனவே இந்தியாவில் 59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தை தீவிரமாக கவனித்துவருகிறோம் என்று சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published: