அருணாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு சீனா தொடர்ந்து உரிமைகொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், லடாக் பகுதியில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மைக்காலத்தில் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரும் பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே வசித்துவந்த மக்கள், வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படிக்க
பிரதமர் மோடி அறிவிக்க உள்ள புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன் தகவல்
படிக்க
இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தபிர் காவோ, ஒவ்வொரு நேரமும், அருணாச்சல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து வருவதாக கூறினார். திபாங் பள்ளத்தாக்கு, அப்பர் சியாங், அப்பர் சோவன்சிரி, சபிலா ஆகியவற்றின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறினார்.
சீனா ஆக்கிரமித்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததாகவும், அதனைத் தடுக்க காங்கிரஸ் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் தபிர் காவோ குற்றம்சாட்டினார்.