என்னைத் தெரியாது என்று சிவகார்த்திகேயன் பேசியதுதான் வருத்தம் - லட்சுமி ராமகிருஷ்ணன்

சிவகார்த்திகேயன் | லட்சுமி ராமகிருஷ்ணன்
- News18 Tamil
- Last Updated: April 13, 2020, 8:07 PM IST
என்னை சிவகார்த்திகேயன் யாரென்றே தெரியாது என்று ஒருமுறை பேசியது வருத்தமளித்ததாக நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் ‘மெரினா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பன்முக திறமை கொண்ட கலைஞனாக அவதாரமெடுத்துள்ளார்.
இந்நிலையில் 'குறள் 786' என்ற ட்ரெய்லரை வெளியிட்டிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், “நான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியிருந்தால் அவருடனான என்னுடைய அறிமுகப் படமாக ‘குறள் 786’ இருந்திருக்க வேண்டும். நான் அந்தப் படத்தைக் கைவிட்டு விட்டேன். அவர் மெரினா படத்தில் நடித்தார். குறள் 786-ல் அவருடைய கதாப்பாத்திரம் சிறப்பானது. ஆனால், அவர் அந்த கதாபாத்திரம் இல்லாமல் கமர்சியல் ரீதியிலான வெற்றிப் படங்களைச் சிறப்பாக செய்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் குறள் 786 ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன், அபிநயா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததோடு இயக்குநராக லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர் அதை இயக்கி இருந்தார்.
இச்செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து அதை தனது ட்விட்டரில் பகிர்ந்து கருத்து பதிவிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதில், “சிவகார்த்திகேயனுடன் சிறு பிரச்னை இருந்தது. அதை நான் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே மறந்துவிட்டேன். அவரை வெற்றியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி. அவர் தற்போதிருக்கும் நிலைமைக்கு அவரது உழைப்பும் திறமையும் தான் காரணம். அவர் ஒருமுறை என்னை யாரென்றே தெரியாது என பேசியது வருத்தமாக இருந்தது. குறள் 786 படத்துக்காக சுமார் இரண்டு வருடங்கள் என்னுடன் சிவகார்த்திகேயன் பயணப்பட்டிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சிவகார்த்திகேயனின் முதல் படம் நான் இயக்கியதாக இருந்திருக்கும் - லட்சுமி ராமகிருஷ்ணன்
டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் ‘மெரினா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பன்முக திறமை கொண்ட கலைஞனாக அவதாரமெடுத்துள்ளார்.
இந்நிலையில் 'குறள் 786' என்ற ட்ரெய்லரை வெளியிட்டிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், “நான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியிருந்தால் அவருடனான என்னுடைய அறிமுகப் படமாக ‘குறள் 786’ இருந்திருக்க வேண்டும். நான் அந்தப் படத்தைக் கைவிட்டு விட்டேன். அவர் மெரினா படத்தில் நடித்தார். குறள் 786-ல் அவருடைய கதாப்பாத்திரம் சிறப்பானது. ஆனால், அவர் அந்த கதாபாத்திரம் இல்லாமல் கமர்சியல் ரீதியிலான வெற்றிப் படங்களைச் சிறப்பாக செய்துள்ளார்.
இச்செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து அதை தனது ட்விட்டரில் பகிர்ந்து கருத்து பதிவிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதில், “சிவகார்த்திகேயனுடன் சிறு பிரச்னை இருந்தது. அதை நான் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே மறந்துவிட்டேன். அவரை வெற்றியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி. அவர் தற்போதிருக்கும் நிலைமைக்கு அவரது உழைப்பும் திறமையும் தான் காரணம். அவர் ஒருமுறை என்னை யாரென்றே தெரியாது என பேசியது வருத்தமாக இருந்தது. குறள் 786 படத்துக்காக சுமார் இரண்டு வருடங்கள் என்னுடன் சிவகார்த்திகேயன் பயணப்பட்டிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்” என்று கூறியுள்ளார்.
Not a short film! Meant to be my debut directorial with #SivaKarthikeyan, I was supposed to introduce him. After I dropped the project he did #Marina. His character in #kurahl786 had so much scope. But, he did great with respect to commercial success without that :) https://t.co/0bxfQJnWBA
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) April 12, 2020
மேலும் படிக்க: சிவகார்த்திகேயனின் முதல் படம் நான் இயக்கியதாக இருந்திருக்கும் - லட்சுமி ராமகிருஷ்ணன்