மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தூய்மையான எரிசக்தி தீர்வுகள் வழங்குநரான மெஜந்தாவுடன் கூட்டு சேர்ந்து அதன் ட்ரியோ சோர் மின்சார சரக்கு வாகனங்களை பெங்களூருவில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் கடைசி மைல் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த கூட்டணியின் கீழ், மெஜந்தா நூறு மஹிந்திரா ட்ரியோ சோர் மின்சார மூன்று சக்கர வாகனங்களை சந்தைக்கு அனுப்ப உள்ளது. இது புதிய இ-மொபிலிட்டி மின்சார வாகன இயக்கப்பட்ட போக்குவரத்து (Electric Vehicle Enabled Transport (EVET)) தளத்தின் விநியோகக் கடற்படையில் சேர்க்கப்படும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு கூறியதாவது, "மெஜந்தாவுடனான இந்த கூட்டு முழு ஈ.வி. சுற்றுச்சூழல் அமைப்பையும் தடையின்றி இணைக்கிறது மற்றும் கடைசி மைல் விநியோக பகுதியை நெறிப்படுத்த உதவும். மெஜந்தாவுடன், கடைசி மைல் விநியோகங்களை அதிக நகரங்களில் மாற்ற நாங்கள் ஆர்வமாக உள்ளோம், "என்று கூறினார்.
ALSO READ | ஒன்பிளஸ் புதிய லிமிடெட் எடிஷன் கோபால்ட் வாட்ச் – விலை, விவரக்குறிப்புகள்!
மஹிந்திரா ட்ரே சோர் ஏற்கனவே இந்திய சாலைகளில் 1.82 மில்லியன் கி.மீ.க்கு மேல் பயணம் செய்துள்ளது என்று மேலும் கூறிய அவர், "இணைக்கப்பட்ட ஈ.வி தொழில்நுட்பத்தின் மூலம் ட்ரியோ சோர் வாகனம் பல புதிய தொழில் தொடங்கும் நபர்களை ஈர்த்தது. ஈ-காமர்ஸ் அதிகாரிகள் அதன் கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவு மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்கியிருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மெஜந்தா நிர்வாக இயக்குனர் மாக்ஸன் லூயிஸ் கூறுகையில், மின் வணிக நிறுவனங்களிடையே மின்சார வாகன விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் வளர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஒரு முழுமையான தீர்வும் சுற்றுச்சூழல் அமைப்பையும் இது தருகிறது" என்று கூறியுள்ளார். ஈ.வி. சார்ஜிங் வன்பொருள் மற்றும் மென்பொருளிலிருந்து ஈ.வி. சார்ஜிங் சேவைகளுக்கு இந்த தீர்வை வழங்க மெஜந்தா நன்கு அறியப்பட்ட நிறுவனமாகும். இப்போது EVET இயங்குதளம், மின் இயக்கம், EV சொலுஷன் ஆகியவை Magenta-வில் கிடைக்கிறது.
ALSO READ | இணைய பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்.. Vi, ஏர்டெல் நெட்வொர்க்குகளின் வேகம் என்ன?
மஹிந்திராவின் தொழிற்பட்டறையில் இருந்து ஒரு திறமையான மற்றும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு சேர்ப்பது ஈ.வி. தீர்வுகளை வழங்குவதற்கான அதன் ஆணையை ஆதரிக்கும் என்று இயக்குனர் மாக்ஸன் லூயிஸ் கூறியுள்ளார். மேலும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி EVET-ன் கீழ், மெஜந்தா நிறுவனம் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இதில் சார்ஜ் கிரிட் மூலம் வாகன சார்ஜிங் ஆதரவும் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, பல்வேறு நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோகளுக்கு பதிலாக பெரும்பாலும் சிஎன்ஜி ரக ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது மின்சார ஆட்டோக்கள் பயன்பாடு சந்தையில் அதிகரித்து வருகிறது. எனினும் இதுவரை எந்தவித பெரிய நிறுவனங்களும் கால்பதிக்காமல் இருந்தன. இந்தநிலையில் கடந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் மின்சார ஆற்றலில் இயங்கும் ஆட்டோவை இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்தது.
ALSO READ | ஆண்ட்ராய்டு போன்களில் கோவிட் -19 தடுப்பூசி அட்டைகளை சேமிக்க அனுமதிக்கும் கூகுள் பாசஸ் ஏபிஐ!
ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆட்டோக்கள் 4 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய வகையில் ஷேர் ஆட்டோ பயன்பாட்டிலான அமைப்பை பெற்றுள்ளது. ஐபி67 தொழிற்நுட்பம் பெற்ற இந்த ஆட்டோ தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க கூடிய வகையிலான பேட்டரி தேவைகளை பெற்றுள்ளன. லித்தியம் இயான் பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ட்ரியோ யாரீ ஆட்டோவில் முழுமையாக சார்ஜ் ஏற சுமார் இரண்டரை மணிநேரம் வரை தேவைப்படும். முழுவதுமாக இந்த ஆட்டோ சார்ஜ் செய்யப்பட்டால் 85 கிமீ வரை இதனால் பயணிக்க முடியும். அதிகப்பட்சமாக 45 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ட்ரியோ ஆட்டோ 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.
ALSO READ | உஷார்! ஃபேஸ்புக் பாஸ்வேர்ட்களை திருடும் ஆப்ஸ்கள்... ஆண்டிராய்டு அதிரடி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.