ரூ.1,02,000 நிதியுதவி
கொரானா தடுப்பு பணிகளுக்காக பொது மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், திரையுலக பிரபல
ரூ.1,02,000 நிதியுதவி
கொரானா தடுப்பு பணிகளுக்காக பொது மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், திரையுலக பிரபலங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கொரோனா நிவாரண பணிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த, 6-ம் வகுப்பு பள்ளி மாணவி பிரதீபா மற்றும் 4-ம் வகுப்பு பயிலும் மாணவன் தீபக் ஆகிய இருவரும் தாங்கள் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 2,000 ரூபாயை வழங்கினர். அதே போல், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமகுமாரி ரூ.1,00,000/- க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் பாராட்டு
மேலும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்கிய பள்ளி மாணவியையும், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெகுவாக பாராட்டினார். பள்ளி மாணவிக்கு இனிப்பு வழங்கி, பேனாவையும் பரிசளித்தார்.
அ.மணிகண்டன் -செய்தியாளர்-விருதுநகர்