தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது சிறு சேமிப்பான 2000 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடையாக வழங்கியுள்ளார். சிறுமியின் இந்த முயற்சிக்கு மாவட்ட நிர்வாகம் சா
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது சிறு சேமிப்பான 2000 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடையாக வழங்கியுள்ளார். சிறுமியின் இந்த முயற்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ரூ.2000 நன்கொடை வழங்கிய சிறுமி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து தொழிலதிபர்கள்,திரை பிரபலங்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என நிதி உதவி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக பள்ளி மாணவர்கள் தங்களது சிறு சேமிப்பு நிதியிலிருந்து தலா 150 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பினார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவர்கள் தங்களது நிதியை கொடுத்துக் கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் விருதுநகரைச் சேர்ந்த மார்க்ரெட் ரேச்சல் என்ற 5ம் வகுப்பு மாணவி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தான் சேமித்து வைத்த 2,000 ரூபாய் பணத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வழங்கினார். காசோலை வழங்கிய மாணவிக்கு பரிசு வழங்கி ஆட்சியர் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தார். சிறுமியின் இம்முயற்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ,நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்: மணிகண்டன்,விருதுநகர்