தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சித்த மூலிகை மருத்துவ உணவுகளை எடுத்து வரும் நிலையில், மூலிகை ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சித்த மூலிகை மருத்துவ உணவுகளை எடுத்து வரும் நிலையில், மூலிகை ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது.
மலிவு விலையில் மூலிகை ஜூஸ்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மூலிகை உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும் நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மூலிகை ஜூஸ் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் மூலிகை ஜூஸ் வியாபாரம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உடலுக்கு வலு சேர்க்க கூடிய அருகம்புல், கீழாநெல்லி நெல்லிக்காய்,வாழைத்தண்டு முருங்கைக்கீரை,பீட்ரூட், கேரட் ஜூஸ் மற்றும் சூப் தயாரித்து விற்கப்படுகிறது. அதேபோல், சிறு தானியங்கள் கம்பு கேழ்வரகு, முளைகட்டிய வெந்தயம், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், பயிறு வகைகள் மலிவு விலையில் ரூபாய் பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடலுக்கு வலு சேர்க்கும் மூலிகை ஜூஸ்
இது குறித்து பேசிய மூலிகை ஜூஸ் வியாபாரி செல்வி கூறியதாவது, இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய மூலிகையான அறுகம்புல் கீழாநெல்லி,வாழைத்தண்டு, முருங்கைக்கீரை,பீட்ரூட்,கேரட் நெல்லிக்காய் ஆகிவற்றை கொண்டு ஜூஸ் மற்றும் சூப் வீட்டிலேயே தயாரித்து கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறேன். தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் மூலிகை ஜூஸ் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரத்தில் ஓரளவு வருமானம் கிடைக்கிறது.அனைத்து ஜூஸ்கள், சிறு தானியங்கள் ஆகியவை ரூபாய் பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகள், முதியவர்களுக்கு நிலவேம்பு, கபசுர குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கி வருகிறேன்.மூலிகை ஜூஸ் தினசரி பருகுவதால் உடலுக்கு வலு சேர்க்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றார்.
அ.மணிகண்டன்- விருதுநகர்- செய்தியாளர்