கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் செருப்பாய் தேய்ந்து வருவதாக செருப்புத் தைக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு
க
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் செருப்பாய் தேய்ந்து வருவதாக செருப்புத் தைக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கியுள்ளது.சமூகத்தின் கடைசி விளிம்பு நிலை தொழில்களான சலவை,முடி திருத்தும் மற்றும் செருப்பு தைக்கும் தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் அன்றாட வருமானத்தை இழந்து பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் விருதுநகர் பேருந்து நிலையத்தில் சாலையோரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், செருப்புத் தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் வருகை இன்றியும் போதிய வருமானம் இன்றியும் வறுமையில் தவித்து வருகின்றனர். குழந்தைகள் படிப்பு செலவு,மருத்துவ செலவு ஆகியவற்றிக்கு வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நிவாரண உதவி வழங்க கோரிக்கை
இதுகுறித்து, செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளி சரவண வேல் கூறியதாவது,கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் செருப்பு தைக்கும் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அன்றாட உணவுக்கு மிகவும் கடினமாக உள்ளது.குழந்தைகளின் படிப்பு செலவு,மருத்துவ செலவுக்கு வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து வருகின்றேன்.மேலும் நான் படும் இன்னல்களை பார்த்து பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பொருள் மற்றும் பண உதவி அளித்து வருகின்றனர்.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கடைநிலை கூலித்தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அ.மணிகண்டன் விருதுநகர் செய்தியாளர்