விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை நோயாளிகள் பயன்பட்டுக்காக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து ஆய்வு செய்தார். அதன் பின் மாவட்ட
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை நோயாளிகள் பயன்பட்டுக்காக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து ஆய்வு செய்தார். அதன் பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை மருத்துவர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
50 படுக்கை வசதி கொண்ட கொரோனா
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட எம்.ரெட்டியாபட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிகிச்சை மையத்தினை இன்று அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் தொழில்த்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நோயாளிகள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.அதன் பின் கொரோனா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகள் படுக்கை அறைகள், உணவு தயாரிக்கும் உணவுக்கூடம்,நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ள உடைமைகளை ஆய்வு செய்தார்.
அதன் பின் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றதும் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இருந்து புதிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியை மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
அ.மணிகண்டன் -செய்தியாளர்-விருதுநகர்