தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை மிக மோசமாக பரவியும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், துணி மாஸ்க் கொரோனாவை கட்டுப்படுத்தாது என்று எச்சரிக்கிறார் விழுப்புரம் மாாவட்டம் கீீழப்பெரும்பாாக்கம்
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை மிக மோசமாக பரவியும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், துணி மாஸ்க் கொரோனாவை கட்டுப்படுத்தாது என்று எச்சரிக்கிறார் விழுப்புரம் மாாவட்டம் கீீழப்பெரும்பாாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மெடிகல் ஆஃபிசர் டாக்டர் ஜோதி.
இதுகுறித்து அவர் நம்மிடம், “கொரோனாவின் முதல் அலைபோல இல்லை, இந்த இரண்டாம் அலை. மக்கள் முதல் அலையில் கடைப்பிடித்த எதுவும் இந்த இரண்டாம் அலையில் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள். அனைவரும் வெளியில் அலைவது, வாகனங்களில் சுற்றுவது, மார்க்கெட், கடைகள் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலானவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதில்லை. மக்கள் அனைவரும் மிக முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது, முகக்கவசம் அணிவதில் உள்ள சிக்கல்.
பெரும்பாலானவர்கள் துணியால் ஆன முகக் கவசத்தினை அணிகிறார்கள். ஆனால், துணி வகை முகக்கவசங்கள் அணிவதால் எந்த பயனும் இல்லை. அதாவது, மற்றொருவிடமிருந்து பரவும் கொரோனா கிருமியை தடுக்காது. சர்ஜரி ( surgery mask ) முகக்கவசம் அணிந்தும் அதன்மீது N 95 முகக்கவசம் அணிகிறோம். அப்படி, நாங்கள் செய்தும்கூட தொற்று ஏற்படுகிறது. அப்படியிருக்க, துணிமாஸ்க் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தும்?
மக்கள் சர்ஜிகல் மாஸ்க் எனப்படும் ட்ரிபிள் லேயர் முகக்கவசம், N 95 முகக்கவசம் அணிவதுதான் பாதுகாப்பானது. முகக்கவசம் அணிவதில் அக்கறை காட்டவேண்டும்” என்கிறார் விழிப்புணர்வூட்டும் விதமாக.
மேலும், மக்கள் கொரோனாவின் முதல், இரண்டாம் அலையின் வேறுபாடுகளை புரிந்துகொள்ளவேண்டும். இரண்டாம் அலையின் வீரியம், மிக மோசமாக இருக்கிறது. வீட்டில் ஒருவருக்கு வந்தால் கண்டிப்பாக அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அந்த தொற்று இருக்கும். ஆனால், அவர்களின் உடல் ரீதியாக தொற்றின் வீரியம் மாறுபடும் என்கிறவர், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு இருக்கிற ஒரே ஆயுதம் ‘தடுப்பூசி’ . மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
வீட்டிலியே பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் நமது ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்துகொள்ளலாம் என்கிறார். தினமும் ஆக்ஸிமீட்டரை விரலில் வைத்து ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். 90 – 95 க்குக்கீழ் இருக்கிறவர்கள் கண்டிப்பாக மருத்துவமனைக்கு சென்று ஆக்சிஜன் செலுத்திக் கொள்ளவேண்டும். அதற்கும் கீழ் இருப்பவர்கள் HFN எனம் High flow nasal oxygen, HF (high flow oxygen ), Mask oxygen என தொற்றின் வீரியத்தை அறிந்து ஆக்சிஜன் செலுத்தப்படும்.
அதிலும், சரிவாரதவர்களுக்கு CPAP மூலம் ஆக்சிஜன் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன், மூலம் பல சீரான நிலைக்கு தொற்று வாய்ந்தவர்கள் திரும்புவார்கள். இதற்கும், அடுத்து நிலை என்னவென்றால் ventilator மூலம் கண்காணிக்கபடுவார்கள். இவ்வாறு, தொற்றுக்கு உள்ளானர்வர்களை பிரித்து அவர்களுக்கு தகுந்த மாதிரி ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்படும் என்றார் டாக்டர் ஜோதி.
செய்தியாளர்: சு.பூஜா, விழுப்புரம்