தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்கீழ் இன்று முதல் வணிக வளாகங்கள், மால்கள் அனைத்தும் திறக்க அனுமதி இல்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பேக்கரி, மளிகை கடைகள் சிறுகுறு வியாபாரிகள், டீக்
தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்கீழ் இன்று முதல் வணிக வளாகங்கள், மால்கள் அனைத்தும் திறக்க அனுமதி இல்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பேக்கரி, மளிகை கடைகள் சிறுகுறு வியாபாரிகள், டீக்கடை போன்றவை மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
இதனையடுத்து ராமநாதபுரம் நகைக்கடை பஜார், சென்டர் கிளாக், சிகில் ராஜவீதி உள்ளிட்ட சாலைகளிலுள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ராமநாதபுரம் டிஎம்பி வங்கிக்கு அருகே டீக்கடை வைத்திருக்கும் தினகரன் கொரோனா கட்டுப்பாடு குறித்து வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்.
“36 வருடங்களாக டீக்கடை தொழில் தான் செய்து வருகிறேன். முன்னாடி நல்லா லாபகரமாத்தான் இருந்துச்சு. இப்போ, இந்த லாக் டவுன் போட்டதிலிருந்து சுத்தமா வியாபாரமே இல்லை. வியாபாரம் ரொம்ப பாதிச்சிடுச்சு.
லாக் டவுன்ல இருந்து டீக்கடையில் கிளாஸ் எதுவும் வச்சு வியாபாரம் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு 12 மணி வரைதான் கடை அப்படின்னு சொல்லிட்டாங்க. அதனால, தம் டீ போட்டு காலையில் ஆறு மணிக்கெல்லாம் வந்து வச்சுக்கிட்டு இருக்கேன். ஏதோ, ஒரு நூறு ரூபா காசு கிடைக்குமே. சுத்தமா வருமானம் இல்லாம போயிடுச்சு” என்கிறார் மன வேதனையோடு.