கொரோனா கட்டுப்பாடுகளால் ஆட்டோவில் இரண்டு பேருக்கு மேல் ஏற்றக்கூடாது என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது . இதனால் ஆட்டோ ஒட்டுநர்கள் வாழ்வாதாரமிழந்து தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆட்டோ ஒ
கொரோனா கட்டுப்பாடுகளால் ஆட்டோவில் இரண்டு பேருக்கு மேல் ஏற்றக்கூடாது என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது . இதனால் ஆட்டோ ஒட்டுநர்கள் வாழ்வாதாரமிழந்து தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆட்டோ ஒட்டுறர் ஜெகன் பேசிய பேது, கொரோனா பாதிப்பால் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஆட்டோவில் இரண்டு பேருக்கு மேல் சவாரி ஏற்றக்கூடாது என்று கூறியுள்ளார்கள். ஆனால், வருகின்ற மக்கள் நான்கைந்து என வருகிறார்கள். 2 பேர் தான் அனுமதி என்று கூறினால் சவாரி வேண்டாமென்று நடந்தே சென்று விடுகிறார்கள்.
இதனால், எங்களுக்கு ரொம்ப பாதிப்பாக இருக்கிறது. ஒரு நாளிற்கு 200 ரூபாய் வருவதே கடினமாக இருக்கிறது. அதனால், மூன்று பேர் ஏற்ற அனுமதி வழங்கினால் உதவியாக இருக்கும்” என்கிறார்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் ஆட்டோ ஓட்டி கொண்டு இருக்கும் பாபு நம்மிடம், “இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது எங்களைப் போன்ற ஆட்டோ ஸ்டாண்ட் தொழிலாளர்கள் தான்.
கடந்த வருடம் இந்த ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து எங்களால் இன்னும் மீள முடியவில்லை. மறுபடியும் இந்த நிலைமை நீடித்தால் எங்கள் குடும்பம் ரொம்ப கஷ்டப்படும். அதனால், தமிழக அரசு இதற்கு ஒரு நல்ல தீர்வு கண்டு எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொடுக்க வேண்டும்.
அதேபோல், பயணிகள் ஏற்றுவது இருவருக்கு மேல் இருக்க கூடாது என்று அறிவித்துவிட்டார்கள். அதனால், ஒரு குடும்பமாக நான்கு பேர் வரும்போது அவர்களை ஏற்ற இயலவில்லை. அவர்கள், இரண்டு ஆட்டோ எடுக்கும் நிலை வருவதால் ஆட்டோ வேண்டாமென்று சென்று விடுகிறார்கள். அதனால், ரொம்ப பாதிக்கப்படுகின்றோம். இதனை சரி செய்து கொடுத்தால் நல்லாயிருக்கும்” என்றார்.