திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்த உள்ள நிலையில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் சாலையோர கடை வைத்து வியாபாரம் செய்யும் பெண் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறியபடி பேசினார்,
திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்த உள்ள நிலையில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் சாலையோர கடை வைத்து வியாபாரம் செய்யும் பெண் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறியபடி பேசினார்,
"எனக்கு ஒன்னுமே தெரியாது. நான் வந்தேனா வியாபாரம் பார்த்துட்டு நான் பாட்டுக்குப் போயிடுவேன். இங்க கடை வைக்க கூடாது தூக்குங்கனு சொல்றாங்க. சண்டை போடுறாங்க. அதுல அழுகையும் கண்ணீருமா தான் தினமும் வீட்டுக்கு போறேன். அங்க போனதுமே சின்ன பிள்ளைங்க என்ன திங்குறதுக்கு வாங்கிட்டு வந்தீங்கனு வருங்க. நான் வியாபாரம் பார்த்தா தான் பிள்ளைகளுக்கு எதாவது வாங்கிட்டு போக முடியும்.
வீட்டுக்கு போனவுடன தீவனத்துக்கு பைய பாக்க ஒடியாறுங்க. அதுக்கு நாங்க என்ன பதில் சொல்லுறது. ஒரு வாரம் ரெண்டு வாரத்துக்கு வீட்டுல இருக்க சொன்னீங்கனா. ஆம்பள துணை இருக்குறவக உழச்சிட்டு இருப்பாக. பொம்பளையா இருக்குற நாங்க சாலையில உட்காந்திட்டு என்ன பண்ணுறது.
ரெண்டு பிள்ளைகள காப்பதணும். செத்துப்போயிட்டா ஆறுதல் சொல்லா கூட ஆள் இல்ல. நான் இங்க ரோட்டுல உட்காந்துட்டு கண்டவண்டலாம் கிழி வாங்கிட்டு இருக்கேன். எந்த கொடுமைய சொல்லிதான் அழுகுறது. நிம்மதியில்லாம யாருக்கு தொல்லை இல்லாம நான் போயிட்டு இருக்கேன்.
6 மணிக்குலாம் வந்து உட்கார்ந்துட்டு இருக்கோம். ஒரு வியாபாரமும் இல்ல. இதுல 12 மணிக்குலாம் கடைய எடுத்துற சொல்லிடுறாங்க எடுத்துறோம். அப்ப இந்த வாங்குன சரக்குகள நாங்க எப்படி வியாபாரம் பண்ணுறது.
ஒரு வியாபாரமும் இல்லாம உட்கார்ந்துட்டு இருக்கோம். ஒரு அஞ்சு நிமிசம் பத்து நிமிசம்னாலும் அள்ளி உதறிடுறாங்க. உங்க நேரம் முடிஞ்சிருச்சுனு. நாங்க எப்படி பொழைக்குறது. சாலையில இருக்குறவங்களுக்கு நீங்க உதவி பண்ணணும். இதவிட்டா, எங்களுக்கு வேற பொழப்பு இல்லை. இதுதான் தஞ்சமேனு வாரோம். அதுக்கு மேல நாங்க என்ன பண்ண முடியும். அரசாங்கம் தான் பார்த்து எங்களுக்கு எதாவது செய்யணும்\" என்று கண்ணீர் வடிக்கிறார்.