கொரோனா கட்டுப்பாட்டினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பல தொழிலாளர்களைப்போலவே வருமானமற்று இருக்கின்றனர் பூ வியாபாரிகள்.
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் பூ
கொரோனா கட்டுப்பாட்டினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பல தொழிலாளர்களைப்போலவே வருமானமற்று இருக்கின்றனர் பூ வியாபாரிகள்.
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் பூக்கடை வைத்துள்ள முருகன் நம்மிடம்,\"வியாபாரம் ரொம்ப மோசமாக இருக்கு. காலை 6 மணி முதல் 12 மணி வரை தான் கடை திறக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வியாபாரம் ஒன்றும் இல்லை. அன்றாடம் குடும்பத்தை ஓட்டுவதற்கேக் கூட வருமானம் கிடையாது. என்ன செய்றதுன்னு எதுவும் தெரியல.
பூ மாலைகள் விற்காமல் கிடப்பதால் பெரும்பாலும் கீழே போடும் நிலை தான் உருவாகிறது. எங்களைப் போன்ற பூ வியாபாரிகள், சாலை ஓரம் கடை போடுபவர்களுக்கு அரசானது உதவி ஏதும் செய்தால் நல்லா இருக்கும். வேற வழி இல்லை எங்களுக்கு.
மாலையை எல்லாம் தினமும் அள்ளி அள்ளி குப்பையில் தான் போடுகிறோம். வியாபாரமும் கிடையாது. இதற்கிடையில், காவல்துறையினர் 11 மணிக்கு எல்லாம் வந்து எங்களை விரட்டி துன்புறுத்துறாங்க. அரசு தான் பார்த்து எங்களுக்கு எதாவது செய்யணும்\" என்கிறார்.
பூ வியாபாரி ஜாஹிர் ஹுசைன் நம்மிடம்,\"கடந்த வருடம் ஊரடங்கிற்கு பிறகு தளர்வுகள் வழங்கப்பட்டபோது வியாபாரம் ஓரளவிற்கு போனது. தற்போது, மீண்டும் பகல் 12 மணி வரை என கட்டுப்பாடு போட்டுள்ளனர். இதனால், வியாபாரம் ரொம்ப பாதிக்கப்படுகிறது. நாங்கள் இதை நம்பித்தான் பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கோம்.
வியாபாரம் ரொம்ப மெதுவாகத்தான் நடக்குது. கடன்களை கட்ட முடியல. குடும்பத்தை பார்த்துக்க முடியல. ரொம்ப சிரமமாக இருக்கு. வாழ்வாதாரமும் பாதிக்கப்படுது. இன்னும், போக போக என்ன நிலை உருவாக போகுதுன்னு தெரியவில்லை. தொழிலும் ரொம்ப மோசமாக போவுது. வாழ்வாதாரமும் இல்லாமல் ரொம்ப சிரமமாக இருக்கு.
வியாபாரம் ஓரளவிற்கு சென்று கொண்டிருந்த போதும் மக்கள் அவ்வளவாக வரவில்லை. அவர்களுக்கும் கொரோனா கண்டு அச்சம் இருக்கத்தானே செய்யும். அதனால், அதிகமாக யாரும் பூ வாங்க வருவதில்லை. கோயில் எல்லாம் பூட்டியாச்சு. யாரும் சாமி கும்பிடவும் செல்வதில்லை. கல்யாணம் காட்சிகளும் கட்டுப்பாட்டோடு நடப்பதால் யாரும் பூ வாங்குவதில்லை. வியாபாரம் ரொம்ப மோசமாக தான் இருக்கிறது.
ஒரு நாளுக்கு 200 ரூபாய்க்கு மல்லிப்பூ விற்கணும்னா 4 கிலோ மல்லிப்பூ வாங்குறோம். வியாபாரம் ஒழுங்கா போகலன்னா எல்லாம் அழுகிப்போகிடும். அதனால், நட்டம் தான் ஏற்படுது.
எவ்வளவு தான் வெளியில் கடனும் வாங்க முடியும். நம்ம சக்திக்கு ஏற்றாற்போல் தான் அதுவும் வாங்க முடியும். ரொம்ப மோசமாக தான் போகிறது. காலையில் இருந்து கடை திறந்ததற்கு இதுவரை 100 ரூபாய்க்கு மட்டும் தான் வியாபாரம் நடந்திருக்கு. அதுக்குமேல, வியாபாரம் போக மாட்டுது. என்ன செய்றதுனு தெரியல. என்ன நிலைமை வர போகுதுனு ஒன்னும் புரியலை\" என்கிறார் வேதனையோடு.