ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 25 செவிலியர்கள், 15 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 25 செவிலியர்கள், 15 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3195 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் வெளி நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், உள் நோயாளிகளாக 1500க்கும் மேற்பட்ட வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 167 செவிலியர்களும், 57 மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தொற்றின் சிறுசிறு அறிகுறிகள் தெரியவந்ததை அடுத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பரிசோதனைகள் நடத்தப் பட்டது.
Also read: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான புதிய கட்டணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு! இதில் 25 செவிலியர்களுக்கும், 15 மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் அரசும் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தியாளர் - பொ.வீரக்குமரன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்