நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி அருகே அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.
இன்று, மதியம் திடீரென அப்பகுதியில் உள்ள புற்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதனைக
நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி அருகே அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.
இன்று, மதியம் திடீரென அப்பகுதியில் உள்ள புற்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதனைக் கண்ட அப்பகுதியினர் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் காற்றின் வேகத்தால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால், அருகில் உள்ள இடங்களில் தீ பிடித்து எரிய தொடங்கியது.
பின்னர், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் இல்லை. வெயில் காரணமாக தீ பிடித்ததா அல்லது வேறு யாராவது புற்களில் தீ வைத்து சென்றனரா என நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.